Saturday, May 16, 2015

பூக்கள் யாவையும்

பூக்கள் யாவையும்


பல்லவி

பூக்கள் யாவையும்
என் கண்கள் காணுதே..
உன்னைக் காணாத நெஞ்சு
குழந்தை போல் ஏங்குதே..

இதயத்தின் அறைகளிங்கு
இருட்டாகக் கிடக்குதே..
உன்னைச் சுற்றியே தினம்
மனப்பறவை பறக்குதே..



சரணம் 1

வெளியே தெரியும் பாலைவனம்
உள்ளத்தில் கொதிக்குதே..
வாழ்க்கையின் சுவடுகளை
காலம் என்னில் பதிக்குதே..

நகர்கின்ற நாட்களெல்லாம்
நரகம் போல் எரிக்குதே..
இந்த மனம் என்றும்போல்
உன் நினைப்பால் தவிக்குதே..

நெஞ்சம் வலிக்குதே..

(பூக்கள் யாவையும்)



சரணம் 2

நிலவு இங்கே ஈரமின்றி
அக்கினி போல் மாறுதே..
தென்றலாக வரும் காற்று
புயல் போலச் சீறுதே..

உன்னோடு சேரும் நாளை
உணர்வுகள் தினம் வேண்டுதே..
ரகசியக் கனவுகளை
நாளும் இமைகள் தேடுதே..

மனம் வாடுதே..

(பூக்கள் யாவையும்)