பூக்கள் யாவையும்
பல்லவி
பூக்கள் யாவையும்
என் கண்கள் காணுதே..
உன்னைக் காணாத நெஞ்சு
குழந்தை போல் ஏங்குதே..
இதயத்தின் அறைகளிங்கு
இருட்டாகக் கிடக்குதே..
உன்னைச் சுற்றியே தினம்
மனப்பறவை பறக்குதே..
சரணம் 1
வெளியே தெரியும் பாலைவனம்
உள்ளத்தில் கொதிக்குதே..
வாழ்க்கையின் சுவடுகளை
காலம் என்னில் பதிக்குதே..
நகர்கின்ற நாட்களெல்லாம்
நரகம் போல் எரிக்குதே..
இந்த மனம் என்றும்போல்
உன் நினைப்பால் தவிக்குதே..
நெஞ்சம் வலிக்குதே..
(பூக்கள் யாவையும்)
சரணம் 2
நிலவு இங்கே ஈரமின்றி
அக்கினி போல் மாறுதே..
தென்றலாக வரும் காற்று
புயல் போலச் சீறுதே..
உன்னோடு சேரும் நாளை
உணர்வுகள் தினம் வேண்டுதே..
ரகசியக் கனவுகளை
நாளும் இமைகள் தேடுதே..
மனம் வாடுதே..
(பூக்கள் யாவையும்)
No comments:
Post a Comment