Wednesday, January 8, 2014

இஸ்லாமிய மெல்லிசைப் பாடல் - வல்லோனின் ஆணை வரமாய் நினைத்தே...

இஸ்லாமிய மெல்லிசைப் பாடல் - 

வல்லோனின் ஆணை வரமாய் நினைத்தே...

வல்லோனின் ஆணை
வரமாய் நினைத்தே தினமும்
வாழ்ந்திடுவோம்..
நோன்பின் புனிதம்
மனதினில் ஏற்றே
நன்மையின்பால் விரைவோம்! (பல்லவி)

இம்மை வாழ்க்கையும்
மறுமை வாழ்க்கையும்
சிறந்திட ஆசைகொள்வோம்
உண்மையின் பாதையில்
உயிர் துறப்பதற்கு - நாளும்
துணிந்து நிற்போம்! (அனு பல்லவி)

வறியோரின் பசிபோக்க
வழிகாட்டுவோம் - நாம்
ஏழைகள் வாழ்வினிலே
எழில் கூட்டுவோம்..
மனத்தூய்மை கொண்டே - நாம்
மறை ஓதுவோம் - தினம்
இறைபோற்றி அளிவில்லா
அருள் வேண்டுவோம்!

லைலத்துல் கத்ர் என்ற
இரவொன்றினை - ரமழானில்
தந்திட்டாய் யா ர'ஹ்மானே..
சுவனமாம் ரய்யானில்
வீற்றிருப்போமே - ஸவ்ம் என்ற
நோன்புகளை நோற்பதினாலே! (சரணம் - 1)

துஆக்களும் திருநாளில்
கபூல் ஆகுமே - அந்த
ஷைத்தான்கள் பயத்தாலே
வெருண்டோடுமே..
உடல் பிணியும் நீங்கும்
இந்த ரமழானிலே - எம்
உணர்வுகளும் சீராகும்
இது போதுமே!

உலகத்து மாந்தரே
கேட்டிடுவீரே - ஸக்காத்தும்
ஸதக்காவும் வழங்கிடுவீரே..
மக்கத்து மாணிக்கம்
நபிபெருமானின் - நாமத்தில்
ஸலவாத்தும் சொல்லிடுவீரே!!! (சரணம் - 2)

No comments:

Post a Comment