இந்த உலகம் நிலையில்லை
பல்லவி
இந்த உலகம் நிலையில்லை
வாழும் வாழ்க்கையும் நிலையில்லை
புரியும் நாள் எப்போது?
பயனில்லை அப்போது!
புரியும் நாள் எப்போது?
பயனில்லை அப்போது!
சரணம் 1
வேதனை வாழ்வில் இருந்தாலோ
வல்லவன் அவனிடம் முறைகளிடு
சோதனை தந்திடும் ஷிர்க் வழியில்
சேர்ந்து நீ திரிவதை மறந்துவிடு!
அந்நியர் அவர்களின் மனதறிந்து
அன்புடன் பழகி இனிமை கொடு...
இஸ்லாத்தை அவர்கள் உணர்ந்துவிட
அவர்களுக்கோர் வாய்ப்பு கொடு
(இந்த உலகம்)
சரணம் 2
நன்மை செய்வதிலே பல தயக்கம்
ஆடம்பரங்கள் மீதுதான் மயக்கம்
எல்லாம் அழிந்துபோகும் ஒருநாளில்
அன்று பயனில்லை உன் வாழ்க்கை!
நபியின் வார்த்தைகள் முத்துக்கள்
நாம் தேட வேண்டிய சொத்துக்கள்
மறுமைநாள் அருகில் வரும்போது
மாண்ட நிமிடங்கள் திரும்பாது!
(இந்த உலகம்)
வணக்கம். எப்படி இருக்கிறாய்? நான் பிரேசிலியன், எனது வலைப்பதிவிற்கு புதிய பின்தொடர்பவர்களைத் தேடுகிறேன். நான் உங்களையும் பின்தொடர முடியும். புதிய நண்பர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.
ReplyDeletehttps://viagenspelobrasilerio.blogspot.com/?m=1