Tuesday, October 28, 2014

கண்கள் உன்னைத் தேடுதடி

கண்கள் உன்னைத் தேடுதடி

பல்லவி

கண்கள் உன்னைத் தேடுதடி
கண்மணியே கண்மணியே
நெஞ்சம் உன்னை நாடுதடி
என்னுயிரே என்னுயிரே

அனு பல்லவி

தாரகைக் கூட்டம் பார்க்கையிலே
உன் சிரிப்பு கண் எதிரே
தாமரைப் பூ பார்க்கையிலே
உன் கண்கள் நினைவினிலே



சரணம் 1

கனவுகளில் வந்து கீதமிசைத்தாய்.. எனை
வாவென்று அழகிய கண்கள் அசைத்தாய்..
மனசுக்குள் புகுந்து ஊஞ்சல் ஆடினாய்
எனக்கு மட்டும் நீ ஏஞ்சல் ஆகினாய்

உயிர் தேகம் இரண்டிலும் ஆட்சி புரிகிறாய்
நீ எனக்கென பார்வையால் சாட்சி பகர்கிறாய்

உன்னருகில் வாழ்ந்திருந்தாலே
உலகமொரு சுவர்க்கமே....



சரணம் 2

காதலோடு நீ என்னைப் பார்க்கிறாய்..
பார்வையால் எந்தன் கவலை தீர்க்கிறாய்
தென்றலாக மாறியே தீண்டிப் போகிறாய்..
தெரியாதது போல் தாண்டிப் போகிறாய்

இதயத்தில் மகிழ்ச்சி காட்டிச் செல்கிறாய்..
இயல்பான என்னை மாற்றிக் கொல்கிறாய்

உன்னருகில் வாழ்ந்திருந்தாலே
உலகமொரு சுவர்க்கமே....

No comments:

Post a Comment