Sunday, November 30, 2014

ஆயிரம் சொந்தங்கள்

ஆயிரம் சொந்தங்கள்


பல்லவி

ஆயிரம் சொந்தங்கள்
அருகிலே இருந்தென்ன
என்னவளே என்னருகே
நீயிருந்தா போதுமடி

ஆயிரம் சொந்தங்கள்
அருகிலே இருந்தென்ன
என்னவளே என்னருகே
நீயிருந்தா போதுமடி



சரணம் 1

கண்மணியே உனக்காக
கவிநூறு நான் படைப்பேன்
கண்ணீரை நீ உதிர்த்தால்
கலங்கியே மனம் துடிப்பேன்

உயிர் உடம்பில் உள்ள வரை
உனக்காக நானிருப்பேன்
உனைப் பிரிந்தால் மறுகணமே
உயிர் நீங்கி நான் இறப்பேன்


சரணம் 2

பூ மேல பனித்துளியா
விழி ரெண்டில் பதிஞ்சிருக்க
காற்றாக தினம் மாறி
எனைச் சுற்றி நெறஞ்சிருக்க

குயில் கூவும் இன்னிசையாய்
இதயத்தில் நீயிருக்க
நட்சத்திர அழகெல்லாம்
நடுநெற்றியில் வரஞ்சிருக்க

1 comment:

  1. பூ மேல பனித்துளியா
    விழி ரெண்டில் பதிஞ்சிருக்க
    காற்றாக தினம் மாறி
    எனைச் சுற்றி நெறஞ்சிருக்க

    குயில் கூவும் இன்னிசையாய்
    இதயத்தில் நீயிருக்க
    நட்சத்திர அழகெல்லாம
    நடுநெற்றியில் வரஞ்சிருக்க....super 👍👌

    ReplyDelete