Sunday, November 30, 2014

ஏன் ஏன் அப்படிப் பார்த்தாய்?

ஏன் ஏன் அப்படிப் பார்த்தாய்?

பல்லவி

ஏன் ஏன் அப்படிப் பார்த்தாய்?
ஏன் ஏன் அப்படி சிரித்தாய்?
ஏன் ஏன் அப்படி ரசித்தாய்?

பேரூந்தில் கைப்பிடித்தேன்
பேசாமல் நின்றிருந்தாய்
மெதுவாக நகர்ந்து வந்தேன்
மெல்ல நீ விலகிச் சென்றாய்


சரணம் 1

வாசனை மலர்களிலே – உன்
வார்த்தை தெறிக்குதடி
பாசமாய் பார்க்கையிலே – என்
ஜீவன் மரிக்குதடி

தூரிகை போல் வந்து
என்னை வரைந்தாயடி
கிறங்கிடச் செய்கின்ற
அழகால் அறைந்தாயடி


சரணம் 2

காவலில் வைத்த மனசை
காவிச் சென்றாயடி
கட்டுண்டு மிதந்திருந்தேன்
கள்வன் என்றாயடி

குளிர்ச்சியான நதியைப்போல்
நெஞ்சில் விழுந்தாயடி
கிழக்கிலே சூரியன் போல்
என்னுள் எழுந்தாயடி

No comments:

Post a Comment